தேசிய செய்திகள்

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு வழக்கில் சி.ஐ.டி. போலீஸ் விசாரணை சரியான பாதையில் செல்கிறது; மந்திரி அரக ஞானேந்திரா பேட்டி

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு வழக்கில் சி.ஐ.டி. போலீஸ் விசாரணை சரியான பாதையில் செல்கிறது என்று மந்திரி அரக ஞானேந்திரா தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

பெங்களூரு:

பெங்களூருவில் நேற்று போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு குறித்து காங்கிரஸ் தலைவர்கள் ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள். இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்ட கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அம்ருத் பால் உள்ளிட்ட முக்கிய போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஒரு மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி கைது செய்யப்பட்டு இருப்பது காநாடகத்தில் தவிர மற்ற மாநிலங்களில் நடைபெற சாத்தியமில்லை.

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடுவை காநாடக அரசு தீவிரமாக எடுத்து கொண்டுள்ளது. அதனால் வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது. இந்த வழக்கு குறித்து விசாரிக்கும் சி.ஐ.டி. போலீசாருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. போலீஸ் விசாரணையில் அரசின் தலையீடு எதுவும் இல்லை. சி.ஐ.டி. போலீஸ் விசாரணை சரியான பாதையில் செல்கிறது.

இவ்வாறு மந்திரி அரக ஞானேந்திரா கூறினார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்