தேசிய செய்திகள்

விமான நிறுவனங்களுடன் விமான போக்குவரத்து செயலர் இன்று அவசர ஆலோசனை

விமான நிறுவனங்களுடன் விமான போக்குவரத்து செயலர் இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

எத்தியோப்பியாவில் கடந்த 10-ந்தேதி போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் தரையிலிருந்து பறக்க தொடங்கிய 6 நிமிடங்களில் கீழே விழுந்ததில் 157 பேர் உயிரிழந்தனர். இதே ரக விமானம் கடந்த 5 மாதங்களுக்கு முன் இந்தோனேஷியாவில் தரையிலிருந்து புறப்பட்ட 13 நிமிடங்களில் விழுந்து விபத்து நேரிட்டதில் 189 பேர் பலியாகினர்.

இரு விமானங்களும் தரையிலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்தில் சிக்கியுள்ளன. போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள் அடுத்தடுத்து விபத்துக்குள்ளானதன் எதிரொலியாக, போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களை ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் பயன்படுத்த ஒவ்வொரு நாடுகளாக தடை விதித்து வருகிறது. எத்தியோப்பியா, சீனா, சிங்கப்பூர், பிரிட்டன், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, பிரேசில், பிரான்சு உள்ளிட்ட நாடுகள் தடை விதித்துள்ளன.

போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களில் உரிய பாதுகாப்பு மாற்றங்கள் செய்யும் வரை தடை விதிக்கப்படும் என்று விமான போக்குவரத்து துறை அமைச்சகம் நேற்று தெரிவித்தது. அதன்படி, போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள் 4 மணிக்கு மேல் பறக்க அனுமதி கிடையாது என்று விமான போக்குவரத்து துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. இந்த சூழலில், விமான நிறுவனங்களுடன் விமான போக்குவரத்து செயலர் இன்று மாலை 4 மணிக்கு அவசர ஆலோசனை நடத்துகிறார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்