தேசிய செய்திகள்

போராட்டக்காரர்கள் - பாதுகாப்பு படையினர் இடையே மோதல்: மணிப்பூரில் மீண்டும் பதற்றம்

திங்கெங்கே மற்றும் நிங்தவுகாங் பகுதிகளில் போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது.

இம்பால்,

மணிப்பூர் மாநிலம் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் ட்ரொங்லாபி பகுதி யில் அண்மையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் இரண்டு குழந் தைகள் உயிரிழந்தனர். இதைக்கண்டித்து திங்கெங்கே பகுதி யில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஆயு தங்களுடன் மர்ம நபர்கள் நடமாடுவதாக தகவல்கள் பரவிய தால் அங்கு பதற்றம் அதிகரித்தது.

இதைத்தொடர்ந்து திங்கெங்கே மற்றும் நிங்தவுகாங் பகுதிகளில் போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. கூட்டத்தைக் கலைக்க பாதுகாப் புப் படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இந்த மோதலில் 10-க்கும் மேற்பட்டோர் லேசான காயம் அடைந்தனர்.

போராட்டக்காரர்களால் வாகனம் ஒன்று தீயிட்டு கொளுத்தப்பட் டது. செய்யப்பட்டுள்ள இந்த வன்முறை தொடர்பாக 4 பேர் கைது னர். சட்டம் - ஒழுங்கை பராமரிக்க மறு உத்தரவு வரும் வரை பி.என்.எஸ்.எஸ். சட்ட பிரிவு 163-ன் கீழ் தடை உத்தரவு பிறப் பிக்கப்பட்டுள்ளது.