தேசிய செய்திகள்

டெல்லியில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து

டெல்லியில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தினத்தந்தி

புதுடெல்லி,

ஜம்மு தவி- புதுடெல்லி வழித்தடத்தில் இயக்கப்படும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலின் கடைசிப்பெட்டி புதுடெல்லி ரயில் நிலையத்தில் தடம் புரண்டது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இன்று காலை 6 மணியளவில் ரயில் டெல்லி ரயில் நிலையத்தின் பிளாட்பார்மில் நுழைந்த போது ரயிலின் பெட்டி தடம் புரண்டுள்ளது.

அண்மைக்காலமாக தொடர் ரயில் விபத்துக்கள் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தடம் புரண்ட ரயில் பெட்டியை சீர் செய்யும் பணியில் ரயில்வே அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த தகவலை வடக்கு ரயில்வே செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்