தேசிய செய்திகள்

சீனாவில் இருந்து வந்து, தனிமைப்படுத்தப்பட்ட 2 மாணவர்கள் வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்

சீனாவில் இருந்து வந்து, தனிமைப்படுத்தப்பட்ட 2 மாணவர்கள் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தினத்தந்தி

கோழிக்கோடு,

கேரளாவில் கொரோனா வைரஸ் நோய் தாக்கியவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், சீனாவின் உகான் நகரில் இருந்து கொரோனா வைரஸ் பீதியால், 2 மாணவர்கள் கடந்த 15-ந்தேதி கேரளா திரும்பினர். அவர்கள் உள்பட கோழிக்கோட்டில் உள்ள மாவட்ட ஆஸ்பத்திரியில் 300-க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் அந்த 2 மாணவர்களும் சொல்லிக்கொள்ளாமல், வளைகுடா நாட்டுக்கு தப்பியோடி விட்டனர்.

இதை மாவட்ட மருத்துவ அதிகாரி டாக்டர் வி.ஜெயஸ்ரீ உறுதி செய்தார். மேலும் இது தொடர்பாக மாநில கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து இருப்பதாகவும் அவர் கூறினார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை