தேசிய செய்திகள்

பொதுமக்கள் போல் சென்று ஆய்வு செய்த போக்குவரத்துறை மந்திரி - வசமாக சிக்கிய நடத்துனர்,ஓட்டுநர்

சில்லறை இல்லை என்று கூறி மந்திரி என்றே தெரியாமல் பேருந்தை விட்டு இறக்கி உள்ளார் நடத்துனர்.

பெங்களூரு,

சில்லறை இல்லை என்று கூறி கர்நாடக போக்குவரத்துத்துறை மந்திரியையே அவர் மந்திரி என்று கூட தெரியாமல் நடத்துனர் பேருந்தை விட்டு இறக்கிவிட்ட சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மந்திரி பைரதி சுரேஷ், பொதுமக்களின் குறைகளை அறிய பெங்களூருவில் உள்ள அரசு பேருந்து ஒன்றில் திடீரென மாறுவேடத்தில் ஏறி அதிரடி ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

அப்போது பேருந்தில் டிக்கெட் எடுத்த மந்திரியிடம், சில்லறை இல்லை என்ற காரணத்தைக் கூறி அவர் மந்திரி என்றே தெரியாமல் நடத்துனர் அவரை பேருந்தை விட்டு கீழே இறக்கிவிட்டுள்ளார். அதேபோல, மற்றொரு அரசு பேருந்து ஓட்டுநர் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளுக்காகப் பேருந்தை நிறுத்தாமல் அலட்சியமாகச் சென்றுள்ளார்.

SCROLL FOR NEXT