தேசிய செய்திகள்

பலூசிஸ்தானில் மோதல்; 13 பயங்கரவாதிகள், 7 பாகிஸ்தானிய வீரர்கள் உயிரிழப்பு

பலூசிஸ்தானில் நடந்த மோதலில் 13 பயங்கரவாதிகள் மற்றும் 7 பாகிஸ்தானிய வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.

தினத்தந்தி

பலூசிஸ்தான்,

பலூசிஸ்தானின் நாவ்ஷ்கி மற்றும் பஞ்ஜ்குர் பகுதிகளில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த தகவலை தொடர்ந்து, பாகிஸ்தானிய பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதில், நாவ்ஷ்கி பகுதியில் நடந்த மோதலில் 9 பயங்கரவாதிகள் வரை சுட்டு கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கி சண்டையில் 4 வீரர்களும் கொல்லப்பட்டு உள்ளனர்.

இதேபோன்று பஞ்ஜ்குர் பகுதியில் நடந்த மோதலில், 4 பயங்கரவாதிகள் வரை சுட்டு கொல்லப்பட்டனர். 4 முதல் 5 பயங்கரவாதிகளை படையினர் சுற்றி வளைத்து உள்ளனர்.

இந்த துப்பாக்கி சண்டையில் 3 பாகிஸ்தானிய வீரர்கள் உயிரிழந்து உள்ளனர். 4 வீரர்கள் காயமடைந்து உள்ளனர். மோதலில் மொத்தம் 13 பயங்கரவாதிகள் மற்றும் 7 பாகிஸ்தானிய வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்