தேசிய செய்திகள்

'தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற முடியாது' - சந்திரசேகர ராவ்

காங்கிரஸ் கட்சியில் டஜன் கணக்கில் முதல்-மந்திரி வேட்பாளர்கள் உள்ளனர் என சந்திரசேகர ராவ் விமர்சித்தார்.

தினத்தந்தி

ஐதராபாத்,

தெலுங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் 30-ந்தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அங்கு அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தெலுங்கானா முதல்-மந்திரியும், பி.ஆர்.எஸ். கட்சியின் தலைவருமான சந்திரசேகர ராவ், ஹூசூர்நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"காங்கிரஸ் கட்சியில் டஜன் கணக்கில் முதல்-மந்திரி வேட்பாளர்கள் உள்ளனர். காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் தாங்களே முதல்-மந்திரியாக வர எண்ணி மக்களிடம் வாக்கு கேட்கின்றனர். மக்கள் வெற்றி பெறும் தேர்தலே உண்மையான தேர்தல். தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற முடியாது."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்