கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

சைனிக் பள்ளிகளை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் - ஜனாதிபதிக்கு கார்கே கடிதம்

மத்திய அரசின் முடிவால், சித்தாந்தரீதியான அறிவை சைனிக் பள்ளிகளில் புகுத்தும் அபாயம் உள்ளதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

ராணுவ அமைச்சகத்தின் கீழ் முற்றிலும் மத்திய அரசு நிதியில் 'சைனிக்' பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் 33 சைனிக் பள்ளிகள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

இதுதொடர்பான அந்த கடிதத்தில், "மத்திய அரசு அறிமுகப்படுத்திய பொது-தனியார் கூட்டு அடிப்படையில், சைனிக் பள்ளிகள் தனியார்மயமாக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, தற்போது 62 சதவீத சைனிக் பள்ளிகள், பா.ஜனதா-ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கு சொந்தமாகி விட்டன.

இந்திய ஜனநாயகம், ஆயுதப்படைகளை கட்சி அரசியலில் இருந்து விலக்கியே வைத்துள்ளது. இந்த மரபை மத்திய அரசு மீறியுள்ளது. மத்திய அரசின் முடிவால், சித்தாந்தரீதியான அறிவை சைனிக் பள்ளிகளில் புகுத்தும் அபாயம் உள்ளது. ஆகவே, சைனிக் பள்ளிகளை தனியார்மயமாக்கும் முடிவை திரும்பப்பெற வேண்டும். இதற்காக போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார். 

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்