தேசிய செய்திகள்

“என்னுடைய குடும்பத்தையே அழிப்பதற்கு மிகப்பெரிய சதித்திட்டம்” பா.ஜனதா எம்.எல்.ஏ. மீது பலாத்கார குற்றம் சாட்டிய சிறுமியின் தாய்

என்னுடைய குடும்பத்தையே அழிப்பதற்கு மிகப்பெரிய சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது என பா.ஜனதா எம்.எல்.ஏ. மீது பாலியல் பலாத்கார குற்றம் சாட்டிய சிறுமியின் தாய் குற்றம் சாட்டியுள்ளார்.

தினத்தந்தி

2017-ம் ஆண்டு ஜூன் மாதம் உத்தரபிரதேச மாநிலம் உன்னோவில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பா.ஜனதா எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் கைது செய்யப்பட்டார். இவ்விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கிடையே சிறுமி சென்ற கார் நேற்று விபத்தில் சிக்கியது. ரேபரேலியில் கார் விபத்தில் சிக்கியதில் சிறுமி படுகாயம் அடைந்தார். அவருடன் சென்ற வழக்கறிஞர் மற்றும் உறவுக்கார பெண் உயிரிழந்தனர். இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையே என்னுடைய குடும்பத்தையே அழிப்பதற்கு மிகப்பெரிய சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது என பா.ஜனதா எம்.எல்.ஏ. மீது பாலியல் பலாத்கார குற்றம் சாட்டிய சிறுமியின் தாய் குற்றம் சாட்டியுள்ளார்.

சிறுமியின் தாயார் பேசுகையில், பாலியல் பலாத்கார குற்றவாளி எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் இந்த சம்பவத்திற்கு பின்னால் உள்ளார். தொடர்ந்து எங்களை அச்சுறுத்தி வருகிறார். சிறையில் இருந்துக்கொண்டே எல்லாவற்றையும் குல்தீப் சிங் செங்கார் இயக்குகிறார் எனக் குற்றம் சாட்டியுள்ளார். கார் விபத்து எதார்த்தமாக நடந்தது இல்லை. இதற்கு பின்னால் மிகப்பெரிய சதிதிட்டம் உள்ளது. எங்களுடைய குடும்பத்தையே அழிக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள் எனவும் கூறியுள்ளார் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார். சிறுமியின் சகோதரி பேசுகையிலும், என்னுடைய சகோதரியை கொலை செய்ய மிகப்பெரிய சதி நடத்தப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது