தேசிய செய்திகள்

கேரளாவில் தொடர் மழை; மின்சாரம் தாக்கி 2 பேர் சாவு

கேரளாவில் தொடர் மழை பெய்து வருகிறது. இதில் மின்சாரம் தாக்கிய விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர்.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தென்மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. மேலும் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்து பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

திருவனந்தபுரம் மாவட்டத்தின் பேட்டை பகுதியில் பெய்த கனமழை காரணமாக மின்கம்பம் ஒன்று சாய்ந்திருந்தது. இதை தொட்ட 2 பேர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். அவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே வலியதுறை, சங்குமுகம், பூந்துறை போன்ற கடலோர பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. ராட்சத அலைகள் கரையை தாக்கி வருவதால் வலியதுறை பகுதியில் சில வீடுகள் இடிந்துள்ளன. இதனால் கரையோர மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். மாநிலத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை