தேசிய செய்திகள்

கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய மந்திரிசபை ஒப்புதல்

கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.

புதுடெல்லி,

பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிசபை குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், 2022-ம் ஆண்டு பருவத்துக்கு கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதன்படி, அரவை கொப்பரை தேங்காய்க்கான விலை குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரத்து 335-ல் இருந்து ரூ.10 ஆயிரத்து 590 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

முழு கொப்பரை தேங்காய்க்கான விலை குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரத்து 600-ல் இருந்து ரூ.11 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. உற்பத்தி செலவை விட 57 சதவீதம் வரை லாபம் கிடைக்கும்வகையில் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு