தேசிய செய்திகள்

அசாமில் நேற்று 91 பேருக்கு கொரோனா பாதிப்பு

அசாமில் தற்போது 1,626 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினத்தந்தி

திஸ்பூர்,

அசாம் மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, அசாமில் இன்று 91 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அசாமில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 6,15,382 ஆக உயர்ந்துள்ளது.

அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுவரை அசாமில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,072 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் அங்கு இன்று ஒரே நாளில் 220 பேர் குணமடைந்துள்ளனர்.

இதன் மூலம் அசாமில் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6,06,337 ஆக உயர்ந்துள்ளது. அசாமில் தற்போது 1,626 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக அசாம் மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது