தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பு மருந்துக்கு ஜி.எஸ்.டி. வரியிலிருந்து விலக்கு அளிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்

கொரோனா தடுப்பு மருந்துக்கு ஜி.எஸ்.டி. வரியிலிருந்து விலக்கு அளிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

ரெம்டெசிவர் போன்ற கொரோனா தடுப்பு மருந்து, கொரோனா மருத்துவ உபகரணங்களுக்கு ஜி.எஸ்.டி. வரியிலிருந்து விலக்கு அளிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து பதிவு செய்த வழக்குடன் இந்த மனுவையும் சேர்த்து விசாரிக்க கோரி, தி பப்ளிக் பாலிஸி வக்கீல்கள் என்ற அமைப்பு இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.

அதில், ரெம்டெசிவர் போன்ற கொரோனா தடுப்பு மருந்து மீது 12 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது. இதற்கான வரி விதிப்பு அளிக்கப்பட்டால் கொரோனா தடுப்பூசி மருந்துகளின் விலையும், வென்டிலேட்டர் போன்ற மருத்துவ உபகரணங்களின் விலையும் குறையும்.

கொரோனா போன்ற பேரிடர் காலத்தில் அத்தியாவசிய மருந்து பொருட்களின் மீதான ஜி.எஸ்.டி. வரியை நீக்கி, மக்களைக் காப்பது சமூகநல அரசின் கடமையாகும். எனவே இதுதொடர்பாக மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனுக்களின் மீதான விசாரணை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு