தேசிய செய்திகள்

கர்நாடகாவில் மதியம் 2 மணிவரை 2.06 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது

கர்நாடகாவில் மதியம் 2 மணிவரை 2.06 லட்சம் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது என சுகாதார துறை தெரிவித்து உள்ளது.

தினத்தந்தி

பெங்களூரு,

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் தீவிர அச்சுறுத்தலாக இருந்து வருகின்றன. அதனை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பின்னர் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அரசு கடந்த 16ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் முதற்கட்டத்தில் சுகாதார பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதன்பின்னர், 50 வயதுக்கு மேற்பட்டோருக்கும் பின்னர் பொதுமக்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என அரசு தெரிவித்தது. இதன்படி, கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில், கர்நாடகாவில் இன்று மதியம் 2 மணிவரை 2 லட்சத்து 6 ஆயிரத்து 577 சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இதனை கர்நாடக சுகாதார துறை தெரிவித்து உள்ளது.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்