தேசிய செய்திகள்

18 வயதுக்கு மேற்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி முன்பதிவு - இணையம் முடக்கம்

18 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்பதிவு தொடங்கியது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் தற்போது 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் மே 1ஆம் முதல் இந்தியா முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தடுப்பூசி பேட நேரடியாக மருத்துவமனைகளுக்கே, தடுப்பூசி மையங்களுக்கே செல்வதற்கு பதில் COWIN ( www.cowin.gov.in ) என்ற அரசின் தளத்தில் அல்லது ஆரோக்ய சேது செயலியில் இன்று மாலை 4 மணி முதல் முன்பதிவு செய்துகெள்ள வேண்டும் என்ற விதிகெண்டு வரப்பட்டது. மாநில அரசுகளிடம் கையிருப்பில் உள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கையை பொருத்து பயனாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோவின் தளத்தை ஒரே நேரத்தில் பல லட்சக்கணக்கானவர்கள் பயன்படுத்த முயன்றதால் பல இடங்களில் இணையதள சேவை முடங்கியது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்