தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி: மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்ட டோஸ் 49.49 கோடி

நாடு முழுவதும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 49.49 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டு உள்ளன.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடு முழுவதுமுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 49.49 கோடி கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டு உள்ளன என மத்திய சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்து உள்ளது.

இதுபற்றி வெளியிடப்பட்ட அறிக்கையில், மொத்தம் 49 கோடியே 49 லட்சத்து 89 ஆயிரத்து 550க்கும் கூடுதலான கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டு உள்ளன. இவற்றில் வீணானது உள்பட மொத்தம் 46 கோடியே 70 லட்சத்து 26 ஆயிரத்து 662 டோஸ்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.

இதுதவிர 8 லட்சத்து 4 ஆயிரத்து 220 டோஸ்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளன. நாடு முழுவதுமுள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளிடம் 3 கோடியே 58 ஆயிரத்து 190 டோஸ்கள் பயன்படுத்தப்படாமல் கைவசம் உள்ளன என்றும் தெரிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை