தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு உயர்வு; புதிதாக 45,892 பேருக்கு தொற்று உறுதி

இந்தியாவில் நேற்றுடன் ஒப்பிடுகையில் கொரோனா பாதிப்பு உயர்ந்து புதிதாக 45,892 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45 ஆயிரத்து 892 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே 7 லட்சத்து 9 ஆயிரத்து 557 அதிகரித்து உள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 817 பேர் உயிரிழந்துள்ளனர். இது நேற்றுடன் (930) ஒப்பிடும்போது சற்று குறைவாகும். இதனால், கொரோனா பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 5 ஆயிரத்து 28 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 44,291 பேர் குணம் அடைந்துள்ளனர். இதனால் மொத்த குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2 கோடியே 98 லட்சத்து 43 ஆயிரத்து 825 ஆக உயர்ந்து உள்ளது.

கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 60 ஆயிரத்து 704 ஆக உள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்