தேசிய செய்திகள்

மும்பை தாராவியில் உள்ள மேலும் 26 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

மும்பை தாராவியில் உள்ள மேலும் 26 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

மும்பை,

இந்தியாவில் மராட்டிய மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போதைய நிலவரப்படி மராட்டியத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. மருத்துவ பணியாளர்கள் வீடு, வீடாக சென்று பரிசோதனை செய்த போதும் கூட இங்கு நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில் தாராவியில் இன்று மேலும் 26 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 859 ஆக உயர்ந்து உள்ளது.

இன்று இருவர் உயிரிழந்துள்ள நிலையில் பலியானோர் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அங்கு கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 222 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்