தேசிய செய்திகள்

கேரளாவில் மேலும் 97 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: முதல்-மந்திரி பினராயி விஜயன் தகவல்

கேரளாவில் மேலும் 97 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்,

இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்துள்ள நிலையில், கேரளாவில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருவோரால் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இன்று மேலும் 97 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,794 ஆக உயர்ந்துள்ளது. மேலும் வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆக உள்ளது.

இன்று வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 65 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 29 பேர் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள். 3 பேருக்கு நோயாளிகளின் தொடர்புகள் மூலம் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 1358 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று 89 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர் என்று அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு