தேசிய செய்திகள்

அதிகாரிக்கு கொரோனா தொற்று: மத்திய உணவுத்துறை மந்திரி அலுவலகத்துக்கு ‘சீல்’

அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், மத்திய உணவுத்துறை மந்திரியின் அலுவலகத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள கிருஷி பவன் கட்டிடத்தில் மத்திய உணவு மற்றும் பொது வினியோகத்துறை அமைச்சகத்தின் அலுவலகம் செயல்பட்டு வருகின்றது. இந்த நிலையில் அங்கு கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறையில் பணியாற்றும் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதனால் அந்த கட்டிடத்தின் ஒரு பகுதியும், அங்குள்ள மத்திய உணவுத்துறை மந்திரி ராம் விலாஸ் பஸ்வானின் அலுவலகமும் மூடப்பட்டு நேற்று சீல் வைக்கப்பட்டது. 2 நாட்களுக்கு அலுவலகம் மூடிபட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்றும் அலுவலகம் இயங்காது.

ஏற்கனவே கடந்த மாதம் 28-ந் தேதி நிதி ஆயோக் அமைப்பின் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதால் அந்த அமைப்பின் அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 5-ந் தேதி சட்ட அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் சாஸ்திரி பவன் கட்டிடத்தின் ஒரு பகுதி சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு