தேசிய செய்திகள்

”துணிச்சலான நடவடிக்கை” குடியுரிமை மசோதாவுக்கு ஆர்.எஸ்.எஸ். பாராட்டு

குடியுரிமை மசோதா நிறைவேற்றப்பட்டது துணிச்சலான நடவடிக்கை என்று ஆர்.எஸ்.எஸ். பாராட்டு தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

குடியுரிமைத் திருத்த மசோதா பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2014 டிசம்பர் 31 ந் தேதிக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு குடியுரிமை திருத்த சட்டம் மசோதா வழி வகை செய்கிறது.

ஜனாதிபதி ஒப்புதலுக்கு பிறகு இது சட்டமாகும். குடியிருப்பு மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வங்கதேச மக்களின் ஊடுருவலுக்கு எதிராக நீண்ட காலம் போராட்டம் நடத்தி வரும் அசாம் மக்கள், இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

குடியுரிமை திருத்த மசோதா துணிச்சலான நடவடிக்கை என்று ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் பையாஜி ஜோஷி பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்காக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை