கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

கேரளாவில் மேலும் உயர்ந்த கொரோனா பாதிப்பு: புதிதாக 46,387 பேருக்கு தொற்று..!

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 46,387 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 46,387 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 15,388 பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1,99,041 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் 309 பேர் (இன்று மட்டும் 32 பேர்) உயிரிழந்துள்ளனர். மத்திய அரசின் கொரோனா புதிய வழிகாட்டுதல்கள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் உயிரிழப்புகள் இன்று சேர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 51,501 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு