தேசிய செய்திகள்

மராட்டியத்தில் கொரோனா 3-வது அலை தொடங்கியது-அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மும்பையில் கொரோனா 3-வது அலை வந்து விட்டதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மும்பை மேயர் தெரிவித்தார்.

தினத்தந்தி

மும்பை,

மராட்டியத்தில் கொரோனா தினசரி பாதிப்பு சுமார் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரமாக உள்ளது. 60 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு, இந்த அளவுக்கு குறைந்ததால், கொரோனா கட்டுக்குள் வந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக பொதுமக்களுக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் பாதிப்பு சதவீதம் மெல்ல மெல்ல அதிகரித்து வருவதாக அரசு தெரிவித்தது.

மாநில தலைநகர் மும்பையில் 300-க்கும் கீழ் வந்த பாதிப்பு கடந்த 1-ந் தேதி முதல் 5-ந் தேதி வரையில் தினமும் 400-ஐ தாண்டி இருந்தது. இதனால் 3-வது அலை அச்சம் ஏற்பட்டது. ஆனால் மும்பையில் கொரோனா 3-வது அலை ஏற்கனவே தொடங்கி விட்டதாக மேயர் கிஷோரி பெட்னேகர் நேற்று அறிவித்தார். இதுபற்றி அவர் கூறுகையில், "மும்பையில் கொரோனா 3-வது அலை வந்து விட்டதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கொரோனா தடுப்பு விதிகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். விநாயகர் சதுர்த்தியை பொதுமக்கள் வீட்டிலேயே கொண்டாட வேண்டும்" என்றார்.

இதற்கிடையே மராட்டியத்தின் 2-வது தலைநகராக கருதப்படும் நாக்பூரிலும் கொரோனா 3-வது அலை தொடங்கி விட்டதாக அந்த மாவட்ட பொறுப்பு மந்திரி நிதின் ராவத் அறிவித்தார். நாக்பூரில் நடைமுறையில் இருக்கும் தளர்வுகளை குறைத்து இன்னும் 3 நாட்களில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார். இதன் மூலம் முதல் 2 அலைகளில் நாட்டிலேயே அதிக பாதிப்பை சந்தித்த மராட்டியத்தில் கொரோனா 3-வது அலை தொடங்கி உள்ளது.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்