தேசிய செய்திகள்

கேரளாவில் புதிதாக 7,631 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

கேரளாவில் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து இன்று 8,410 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

கேரளாவில் இன்று மேலும் 7,631 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 41 ஆயிரத்து 859 ஆக உயர்ந்துள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 6,685 பேருக்கு கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் நோய் பரவி உள்ளது. இவர்களில் 723 பேருக்கு நோய் எப்படி பரவியது என்பது குறித்து தெரியவில்லை.

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து இன்று 8,410 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 45 ஆயிரத்து 399 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு இன்று 22 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் பலியானோர் மொத்த எண்ணிக்கை 1,161 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுடன் 95,200 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தகவலை கேரள சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது