தேசிய செய்திகள்

மராட்டியத்தில் மேலும் 8,142 பேருக்கு கொரோனா தொற்று- சுகாதாரத்துறை தகவல்

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பால் இன்று ஒருநாளில் மட்டும் 180- பேர் உயிரிழந்தனர்.

தினத்தந்தி

மும்பை,

நாட்டிலேயே மராட்டியத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்தநிலையில் 3 மாதங்களுக்கு பிறகு நேற்று முன்தினம் மாநிலத்தில் பாதிப்பு அதிரடியாக குறைந்தது. அன்று 5 ஆயிரத்து 984 பேருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டது. அதாவது 3 மாதங்களுக்கு பிறகு தொற்று பாதிப்பு 6 ஆயிரத்துக்கும் கீழ் வந்தது.

இந்த நிலையில், மராட்டியத்தில் நேற்றும் இன்றும் கொரோனா பாதிப்பு சற்று உயர்ந்துள்ளது. மாநிலத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 8,142- ஆக உள்ளது. அதேபோல், இன்று ஒரே நாளில் 180- பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன் மூலம் மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 42 ஆயிரத்து 633- ஆக உயர்ந்துள்ளது. மராட்டியத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 16 லட்சத்து 17 ஆயிரமாக உயர்ந்துள்ளது. மாநில தலைநகர் மும்பையில் இன்று 1,609- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்