கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

மராட்டியத்தில் புதிதாக 1,715 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

மராட்டிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,715 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

மும்பை,

மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,715 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 65,91,697 ஆக உயர்ந்துள்ளது. கொரொனா தொற்று பாதிப்பில் இருந்து 2,680 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 64,19,678 ஆக அதிகரித்துள்ளது. இதன்படி கொரோனா மீட்பு விகிதம் 97.39 சதவிகிதமாக உள்ளது.

மராட்டியத்தில் ஒரே நாளில் தொற்று பாதிப்புக்கு 29 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 1,39,789 ஆக உயர்ந்துள்ளது. இதன்படி உயிரிழப்பு விகிதம் 2.12 சதவிகிதமாக உள்ளது.

மராட்டியத்தில் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 28,631 ஆக உள்ளது. மராட்டிய தலைநகர் மும்பையில் இன்று 366 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு