தேசிய செய்திகள்

தயக்கம் காட்டும் மக்களை தடுப்பூசி போட வைப்பது சவலானது: மராட்டிய சுகாதாரத்துறை மந்திரி

தயக்கம் காட்டும் மக்களை தடுப்பூசி போட வைப்பது சவாலானது என சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறியுள்ளார்.

தினத்தந்தி

தயக்கம்

நாடு முழுவதும் 100 கோடிக்கும் அதிகமாக தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன. மராட்டியத்திலும் தடுப்பூசி போடும் பணி வேகமாக நடந்து வருகிறது. மாநிலத்தில் 9 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தநிலையில் தடுப்பூசி போட தயக்கம் காட்டும் மக்களை, ஊசி போட வைப்பது அரசுக்கு மிகப்பெரும் சவாலாக இருப்பதாக சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறியுள்ளார்.

சவாலான பணி

இது குறித்து அவர் கூறுகையில், மாநிலத்தில் 70 சதவீதம் பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் தடுப்பூசி போட தயக்கம் காட்டுகின்றனர். அவர்களை தடுப்பூசி போட வைப்பது சுகாதாரத்துறைக்கு சவாலான பணியாக உள்ளது. பூஸ்டர் டோஸ் குறித்து இந்திய மருத்துவ கவுன்சில் இதுவரை வழிகாட்டுதல்கள் எதையும் வெளியிடவில்லை. எனவே இந்த விவகாரத்தில் மாநில அரசு முடிவு எடுக்க முடியாது." என்றார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு