Image Courtacy: ANI 
தேசிய செய்திகள்

டெல்லியில் கனடா பிரதமருக்கு எதிராக போராட்டம்

டெல்லியில் கனடா பிரதமருக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது.

தினத்தந்தி

புதுடெல்லி,

கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியதை தொடர்ந்து, இருநாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிராக ஐக்கிய இந்து முன்னணி அமைப்பினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த அமைப்பின் தலைவர் ஜெய் பகவான் கோயல் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஏரளாமானோர் பங்கேற்றனர். அவர்கள் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

போராட்டம் குறித்து பேசிய ஜெய் பகவான் கோயல், "பல மாதங்களாக கனடா பிரதமர், இந்திய எதிர்ப்பு காலிஸ்தானிகளை வெளிப்படையாக ஆதரித்தும், பாதுகாத்தும் வருகிறார். இதற்கு இந்திய அரசு பலமுறை எதிர்ப்பு தெரிவித்தும் அவர் அதை பொருட்படுத்தவில்லை.

கனடா பிரதமருக்கு இந்திய எதிர்ப்பு காலிஸ்தானிகள் மீது அதிக அன்பு இருந்தால், அவர்களுக்கு கனடாவின் ஒரு பகுதியை கொடுத்து புதிய காலிஸ்தான் தேசத்தை உருவாக்கலாமே. அப்படி உருவாக்கினால் முதல் ஆளாக நாங்கள் அதை அங்கீகரிப்போம்" என கூறினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து