கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

காஷ்மீர் முகாமில் சி.ஆர்.பி.எப். வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

காஷ்மீர் முகாமில் சி.ஆர்.பி.எப். வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினத்தந்தி

ஸ்ரீநகர்.

காஷ்மீரில் புல்வாமாவில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் முகாம் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அதிகாலையில் வீரர்கள் தங்கியிருந்த கூடாரம் ஒன்றில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டுள்ளது. அங்கு சென்று பார்த்தபோது காவலராக பணிபுரிந்து வந்த அஜய் குமார் என்பவர் ரத்தவெள்ளத்தில் தரையில் சரிந்து கிடந்தது தெரிந்தது.

சக வீரர்கள் அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அஜய் குமார் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு அஜய் குமார் தற்கொலை செய்துகொண்டதாக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்