தேசிய செய்திகள்

சிங்கப்பூரில் இருந்து விமானப்படை விமானம் மூலம் கிரையோஜெனிக் கன்டெய்னர்கள், இந்தியா வந்தன; ஆக்சிஜன் வினியோகத்தை அதிகரிக்க உதவும்

ஆக்சிஜன் வினியோகத்தை அதிகரிக்க உதவும் வகையில் 4 கிரையோஜெனிக் கன்டெய்னர்கள், சிங்கப்பூரில் இருந்து விமானப்படை மூலம் இநதியா வந்தன.

ஆக்சிஜன் தட்டுப்பாடு போக்க நடவடிக்கை

கொரோனா வைரஸ் தொற்று பரவலால் நாட்டின் ஆக்சிஜன் தேவை பெருகி வருகிறது. ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் நோயாளிகள் மரணத்தை தழுவுகிற துயரங்கள் நேர்கின்றன.ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.அந்த வகையில், காலியான ஆக்சிஜன் டேங்கர்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் விமானப்படை விமானம் மூலம் ஆக்சிஜன் நிரப்பும் நிலையங்களுக்கு எடுத்துச்செல்லப்படுகின்றன.

கிரையோஜெனிக் கண்டெய்னர்கள்...

இந்த நிலையில் சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் இருந்து இந்திய விமானப்படையின் சி-17 விமானம் மூலம் மிகப்பெரிய அளவிலான 4 கிரையோஜெனிக் கண்டெய்னர்கள் நேற்று இந்தியா வந்து சேர்ந்தன.இவை மேற்கு வங்காளத்தில் உள்ள பனாகாருக்கு (மேற்கு வங்காளம்) ஆக்சிஜன் நிரப்புவதற்காக மாலை 4.30 மணிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.இதன் மூலம் ஆக்சிஜன் வினியோகம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.ஏற்கனவே அத்தியாவசிய மருந்துகளையும், மருத்துவ சாதனங்களைளயும் விமானப்படை விமானங்கள் நாட்டின் பல்வேறு இடங்களிலும் உள்ள கொரோனா ஆஸ்பத்திரிகளுக்கு எடுத்துச்செல்வது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்