தேசிய செய்திகள்

பொது பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு: ஜூன் 1-ந் தேதி தொடக்கம்

ஜூன் 1-ந் தேதி பொது பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

45 மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான பொது பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு (கியூட்), அடுத்த ஆண்டு ஜூன் 1-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடைபெறும்.

தேசிய தேர்வு முகமை நேற்று இதை அறிவித்தது. இதற்கான விண்ணப்ப நடைமுறை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு பல்கலைக்கழகங்களில் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கு மாணவர்களுக்கு கியூட் தேர்வு மதிப்பெண் பெரிதும் உதவும் என்று பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் எம்.ஜெகதீஷ்குமார் கூறியுள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து