தேசிய செய்திகள்

குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை அளிக்கப்படும்; மூஸ்வாலா கொல்லப்பட்டது குறித்து கெஜ்ரிவால் ஆவேசம்

பஞ்சாபி பாடகரும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான சித்து மூஸ்லா , அங்குள்ள மன்சா மாவட்டத்தில் அடையாளம் தெரியாத மர்ம கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

புதுடெல்லி,

பஞ்சாபி பாடகரும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான சித்து மூஸ்வாலா , அங்குள்ள மன்சா மாவட்டத்தில் அடையாளம் தெரியாத மர்ம கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்டார். ஆம் ஆத்மி அரசு நேற்றுதான் அவருக்கு அளித்து வந்த போலீஸ் பாதுகாப்பை திரும்பப் பெற்றது. அதற்கு மறுநாளே சித்து மூஸ்லா கொல்லப்பட்டது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கனடாவைச்சேர்ந்த கேங்ஸ்டர் இந்த படுபாதக செயலில் ஈடுபட்டு இருப்பதாக சந்தேகம் எழுந்து உள்ளது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது என்றும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடும் தண்டனை வாங்கி கொடுக்கப்படும் என்று டெல்லி முதல் மந்திரியும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மேலும், அனைவரும், பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் எனவும் கெஜ்ரிவால் தனது டுவிட் பதிவின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். 

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்