தேசிய செய்திகள்

ராணுவத்தில் நடந்த சைபர் பாதுகாப்பு மீறல் - ராணுவ அதிகாரிகளின் வாட்ஸ்ஆப் குழுவில் அண்டை நாடுகள் உளவு

சீனா ,பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் உளவுத்துறை அமைப்புகள் இந்திய வீரர்களிடம் இருந்து ராணுவ தகவல்களை கசியவிட முயன்றதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்திய ராணுவ அதிகாரிகள் வாட்ஸ் ஆப் குழுவில் கடுமையான சைபர் பாதுகாப்பு மீறல் நடைபெற்றுள்ளதை ராணுவம் மற்றும் உளவுத்துறையினர் கண்டுபிடித்திருக்கின்றனர். வாட்ஸ்அப்பில் ராணுவ அதிகாரிகளின் இணைய பாதுகாப்பு மீறல் கண்டுபிடிக்கப்பட்டது

இந்த விஷயம் தொடர்பாக பாதுகாப்புத்துறை தரப்பில் கூறப்பட்டதாவது:-

ராணுவம் மற்றும் உளவுத்துறையின் தகவலின்படி, ஒரு வாட்ஸ்அப் குழு மூலம் பாதுகாப்பு மீறல் சாத்தியமாகி இருக்கிறது. வாட்ஸ்அப் குழுக்கள் மூலமாகவே இதுபோன்ற பாதுகாப்பு மீறல் கண்டறியப்பட்டு இருக்கிறது. இதுகுறித்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த பாதுகாப்பு குறைபாடு குறித்து உயர்மட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. சைபர் பாதுகாப்பு மீறல்களில் சில ராணுவ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதற்கான அறிகுறிகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்வத்தில் தொடர்புடைய ராணுவ வீரர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இது அதிகாரப்பூர்வ ரகசிய சட்டத்தின் கீழ் வரும் விஷயம். பாதுகாப்பு மீறலுக்கும் எதிரி நாட்டின் உளவு பார்க்கும் செயலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்பது விசாரணையில் தெரியவரும். இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மறுபுறம் இந்தியாவின் அண்டை நாடுகளாக விளங்கும் சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் உளவுத்துறை அமைப்புகள் இந்திய ராணுவ வீரர்களிடம் இருந்து ராணுவ தகவல்களை கசியவிட முயன்றதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் பெரும்பாலும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்துள்ளன. எனினும், சில ராணுவ அதிகாரிகள் அவர்களின் வலையில் சிக்கி விடுகின்றனர் என்று பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல் இது ராணுவ விவகாரம் என்பதால் தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இது தொடர்பான கூடுதல் விவரங்களை வெளியிட முடியாது. இந்த சம்பவம் குறித்து வதந்திகளை பரப்புவது என்பதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பெயர் விவரங்களை வெளியிடுவது என்பதும் விசாரணையை பாதிக்கும் என ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து