தேசிய செய்திகள்

மோந்தா புயல்: ஏனாமில் பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை - புதுச்சேரி அரசு

தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது

தினத்தந்தி

புதுச்சேரி,

தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. அதேவேளை வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று புயலாக உருவாக உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு மோந்தா புயல் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் நாளை மறுதினம் இரவு ஆந்திராவின் காக்கிநாடா பகுதியில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மோந்தா புயல் காரணமாக புதுச்சேரியில் உள்ள ஏனாமில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை முதல் 3 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மோந்தா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை ஏனாமில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் காக்கிநாடா அருகே ஏனாம் அமைந்துள்ளதால் பாதுகாப்பு நலன் கருதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து