தேசிய செய்திகள்

ஒகி புயலில் சிக்கிய 17 கேரள மீனவர்கள் கடலில் இருந்து மீட்பு

ஒகி புயலில் சிக்கிய கேரள மீனவர்கள் 17 பேர் 5 நாட்களுக்கு பின்னர் கடலில் இருந்து மீட்கப்பட்டு உள்ளனர்.

திருவனந்தபுரம்,

வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஒகி புயல் காரணமாக தென் தமிழம், கேரளாவில் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. கேரளா மற்றும் தமிழகத்தில் இருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணியில் விமானப்படை, கடற்படை மற்றும் கடலோர காவல்படை தீவிரமாக இறங்கி உள்ளது.

இந்த நிலையில், ஐ.என்.எஸ். கல்பேனி கப்பல் உதவியுடன் கடலில் இருந்த 13 மீனவர்கள் மீட்கப்பட்டு கொல்லம் நகர அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளனர்.

இதேபோன்று விமான படை ஹெலிகாப்டர் உதவியுடன் காயம்குளம் மேற்கே 30 மைல்கள் தொலைவில் 4 மீனவர்கள் மீட்கப்பட்டு உள்ளனர். அவர்கள் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

அடுத்த 12 மணிநேரத்தில் வட லட்சத்தீவு பகுதிகளில் பலத்த மழை பெய்ய கூடும் என தகவல் தெரிவிக்கின்றது.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு