தேசிய செய்திகள்

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 47 ஆக சரிவு - தொற்றுக்கு உயிரிழப்பு இல்லை

நேற்று முன்தினம் 80 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. நேற்று இந்த எண்ணிக்கை மேலும் குறைந்தது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் 80 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. நேற்று இந்த எண்ணிக்கை மேலும் குறைந்தது. புதிதாக 47 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது.

இதை தொடர்ந்து இந்தியாவில் தொற்று பாதிப்புக்கு ஆளானோரின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 93 ஆயிரத்து 999 ஆக உயர்ந்தது. கொரோனா தொற்றால் நேற்று உயிரிழப்பு எதுவும் ஏற்படாததால், தொற்றுக்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 903 ஆக தொடர்கிறது.

நேற்று முன்தினம் கொரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,670 ஆக இருந்த நிலையில், நேற்று அது 1,655 ஆக குறைந்தது. இதுவரை 4 கோடியே 44 லட்சத்து 60 ஆயிரத்து 441 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு