கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

'அவசர நிலையை துணிச்சலுடன் எதிர்த்தவர்களை தலைவணங்குகிறேன்' - பிரதமர் மோடி

அவசர நிலையை துணிச்சலுடன் எதிர்த்தவர்களை தலைவணங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் சார்பில் நாட்டின் பிரதமராக இந்திரா காந்தி இருந்தபோது, 1975-ம் ஆண்டு, ஜூன் மாதம் 25-ந் தேதி அவசர நிலையை அமல்படுத்தினார். இது 1977-ம் ஆண்டு மார்ச் 21-ந் தேதி முடிவுக்கு வந்தது. அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டதின் 48-வது ஆண்டு நினைவு தினம் நேற்று ஆகும். இதையொட்டி பிரதமர் மோடி டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார்.

அதில் அவர், " அவசர நிலையை எதிர்த்து, ஜனநாயக உணர்வினை வலுப்படுத்த பாடுபட்ட துணிச்சலான மக்களை நான் தலைவணங்குகிறேன். அவசர நிலையின் இருண்ட காலம், நமது வரலாற்றில் மறக்க முடியாத காலம். நமது அரசியல் சாசனம் கொண்டாடும் மதிப்புகளுக்கு அது முற்றிலும் எதிரானது" என குறிப்பிட்டுள்ளார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை