தேசிய செய்திகள்

சந்திரயான்-3 வெற்றி; கேரள கோவிலில் இஸ்ரோ தலைவர் வழிபாடு

இஸ்ரோ தலைவர் கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் கோவிலுக்கு ஆன்மிக பயணம் சென்றுள்ளார்.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

இந்தியா, கடந்த 23-ந் தேதி நிலவின் தென்துருவத்தில் இறங்கி வரலாறு படைத்தது. இதன்மூலம் உலக நாடுகளின் கவனம் இந்தியாவின் பக்கம் திரும்பி உள்ளது. தற்போது இந்தியாவின் சந்திரயான்-3 சாதனைக்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்தியர்கள் அனைவரும் சந்திரயான்-3 வெற்றியை கொண்டாடி வரும் நிலையில் இஸ்ரோ தலைவர் எஸ். சோமநாத், கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் கோவிலுக்கு ஆன்மிக பயணம் சென்றுள்ளார். அங்குள்ள பௌர்ணமிகாவு-பத்ரகாளி கோவிலில் வழிபாடு செய்தார்.

அதன்பிறகு இஸ்ரோ தலைவர் எஸ். சோமநாத் அளித்த பேட்டியில், " இந்தியா இப்போது நிலா, சூரியன், செவ்வாய் மற்றும் வெள்ளி கிரகங்களுக்கு செல்லும் திறன்களைக் கொண்டுள்ளது" என்றார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்