தேசிய செய்திகள்

நாளை உருவாகிறது 'மிக்ஜம்' புயல் - பலத்த மழை எச்சரிக்கை

தமிழகம், புதுச்சேரியில் டிச. 6-ஆம் தேதி வரை அநேக இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை, 

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகாந்து நேற்று  காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமா 780 கி.மீ. தொலைவிலும், மசூலிப்பட்டினத்திற்கு (ஆந்திரம்) தென்கிழக்கே சுமா 940 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகாந்து இன்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நாளை தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும்.

இதைத் தொடாந்து, டிச. 5-ஆம் தேதி முற்பகல் ஆந்திர மாநிலம் நெல்லூ- மசூலிப்பட்டினம் இடையே கரையைக் கடக்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக மயிலாடுதுறை, சென்னை, திருவள்ளூ உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் புயல் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் டிச. 6-ஆம் தேதி வரை அநேக இடங்களில் மழை பெய்யும். இந்த நிலையில் நாளை கடலூ, மயிலாடுதுறை, நாகை , திருவாரூ, தஞ்சாவூ, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து