தேசிய செய்திகள்

அயோத்தி சரயு நதிக்கரையில் 14 லட்சம் தீபங்கள் ஏற்ற திட்டம்

அயோத்தியா-உத்தர பிரதேசத்தில் இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டத்தின் போது, 14 லட்சம் தீபங்கள் ஏற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

உத்தர பிரதேச முதல்-மந்திரியாக யோகி ஆதித்யநாத் 2017ல் பதவியேற்றவுடன், தீபாவளி பண்டிகைக்கு முதல் நாள், 'தீபோத்ஸவ்' எனப்படும் தீபத் திருவிழாவை அறிவித்தார். அந்த ஆண்டு, அயோத்தி நகரின் சரயு நதிக்கரையில் 51 ஆயிரம் தீபங்கள் ஏற்றப்பட்டன. அடுத்து, 2019ல் 4.10 லட்சம்; 2020ல் 9 லட்சத்துக்கும் அதிகமான தீபங்கள் ஏற்றப்பட்டு, கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது.இந்த ஆண்டு, தீபாவளிப் பண்டிகைக்கு முதல் நாளான அக்., 23ல் 14 லட்சம் தீபங்கள் ஏற்ற திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, உ.பி.,யின் மண்பாண்ட தொழிலாளர்கள் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்