தேசிய செய்திகள்

ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க மேலும் ஒரு ரிட் மனு - சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்

ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க மேலும் ஒரு ரிட் மனு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த இந்து தனிநபர் சட்ட வாரியத்தின் தலைவர் அசோக் பாண்டே சுப்ரீம் கோர்ட்டில் ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும். இந்த பாலத்தை தரிசிக்கும் வகையில் கடலில் குறிப்பிட்ட தூரத்துக்கு சுவர் எழுப்ப உத்தரவிட வேண்டும்.

ராமர் பாலத்தை தரிசிக்க ஏற்பாடு செய்யாமல் இருப்பது அரசியலமைப்பு சாசனம் வழங்கியுள்ள உரிமைகளை மீறுவதாக உள்ளது. இப்பாலத்தை தரிசனம் செய்வதற்கும், வழிபடுவதற்கும் ஏற்பாடு செய்ய உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை