தேசிய செய்திகள்

ஊரடங்கு முடிந்து 6 மாதம்வரை பொது போக்குவரத்து பயன்பாடு குறையும்: ஆய்வில் தகவல்

ஊரடங்கு முடிந்து 6 மாதம்வரை பொது போக்குவரத்து பயன்பாடு குறையும் என்று ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லி மற்றும் அதைச்சுற்றியுள்ள நகரங்களில் பொது போக்குவரத்து பயன்பாடு குறித்த அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது.

அதில், ஊரடங்கு முடிவடைந்து 6 மாத காலம்வரை பொது போக்குவரத்தை பயன்படுத்துவதை பொதுமக்கள் குறைத்துக் கொள்வார்கள் என்று தெரிய வந்துள்ளது. மெட்ரோ ரெயில் பயணம், 37 சதவீதத்தில் இருந்து 16 சதவீதமாக குறையும்.

ஆனால், கார், இருசக்கர வாகன பயன்பாடு 28 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக அதிகரிக்கும். சொந்த வாகனங்களில் பயணிப்பதையே மக்கள் விரும்புகின்றனர் என்றும், தங்கள் ஆரோக்கியத்துக்கே முன்னுரிமை அளிக்கின்றனர் என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை