தேசிய செய்திகள்

டெல்லி: தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலி

தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்துக்கான சரியான காரணம் குறித்த எந்த ஒரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள மான்சரோவர் பூங்கா மெட்ரோ நிலையம் அருகே உள்ள தொழிற்சாலையில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர்.

மேலும் இந்த தீ விபத்தில் தொழிற்சாலையின் 2வது மாடியில் உள்ள சேமிப்பு அறையில் அஜீத் (25) என்ற இளைஞரின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தீ விபத்துக்கான சரியான காரணம் குறித்த எந்த ஒரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை. மேலும் இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை