தேசிய செய்திகள்

கார்கில் போர் வெற்றி தினம்: போர் நினைவிடத்தில் ராஜ்நாத்சிங் அஞ்சலி

ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் டெல்லியில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்துக்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

புதுடெல்லி,

கடந்த 1999-ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கில் பகுதிக்குள் ஊடுருவி ஆக்கிரமித்தது. இது பனி சூழ்ந்த மலை முகடுகளை கொண்ட பகுதி ஆகும். இதைத்தொடர்ந்து இந்திய ராணுவ வீரர்கள், பாகிஸ்தான் சிப்பாய்களை எதிர்த்து தீவிரமாக போரிட்டனர். ஆபரேஷன் விஜய் என்ற பெயரில் நடைபெற்ற இந்த போர் சுமார் 3 மாதங்கள் நடைபெற்றது. இதில் இந்தியா வெற்றி பெற்றது. பாகிஸ்தான் சிப்பாய்கள் விரட்டி அடிக்கப்பட்டனர்.

இந்த போரில் பாகிஸ்தான் தரப்பில் ஏராளமான சிப்பாய்கள் பலி ஆனார்கள். இந்திய தரப்பில் 500-க்கும் அதிகமான வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். ஆபரேஷன் விஜய் போரில் வெற்றி பெற்றதாக 1999-ம் ஆண்டு ஜூலை 26-ந் தேதி இந்திய ராணுவம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

இதைத்தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ந் தேதி கார்கில் போர் வெற்றி தினமாக கொண்டாடப்படுகிறது. 22-வது கார்கில் போர் வெற்றி தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் டெல்லியில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்துக்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை