கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

வக்பு வாரிய சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்த ‘ரிட்’ மனு: மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட்டு நோட்டீஸ்

வக்பு வாரிய சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்த ‘ரிட்’ மனு தொடர்பாக, மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

அறக்கட்டளை, மதம் சார்ந்த அறக்கட்டளைகள், வக்பு வாரியங்கள் ஆகியவற்றுக்கு ஒரே மாதிரியான சட்டங்களை உருவாக்க கோரி பா.ஜ.க.வை சேர்ந்த அஸ்வினி குமார் உபாத்யாய் டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) விபின் சங்கி தலைமையிலான அமர்வு விசாரித்தது. மனுவை பரிசீலித்த ஐகோர்ட்டு, மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய சட்ட அமைச்சகம், மத்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை, இந்திய சட்ட ஆணையம், மத்திய வக்பு வாரியம் ஆகியவை 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 28-ந்தேதிக்கு தள்ளிவைத்தது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது