தேசிய செய்திகள்

பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியுடன் ராம்நாத்கோவிந்த் சந்திப்பு

பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியை தேஜகூட்டணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ராம்நாத்கோவிந்த் சந்தித்தார்.

புதுடெல்லி,

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவி காலம் முடிவடைவதால், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க அடுத்த மாதம் 17-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல், வருகிற 28-ந் தேதி முடிவடைகிறது. இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ஒருமித்த கருத்துடன் பொது வேட்பாளரை நிறுத்த பா.ஜனதா முயற்சி மேற்கொண்டது.

திடீரென, பா.ஜனதா கூட்டணி வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டார். அவரை ஆதரிக்க முடியாது என்று பல்வேறு எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.எதிர்க்கட்சிகள் நாளை (வியாழக்கிழமை) கூடி ஆலோசனை நடத்துகின்றன. எனவே, எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்று தெரிகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ராம்நாத்கோவிந்திற்கு ஆதரவாக மத்திய மந்திரிகள் ஆதரவு கோரி வருகின்றனர். இந்த நிலையில்,பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான முரளி மனோகர் ஜோஷியை ராம்நாத்கோவிந்த் இன்று சந்தித்தார். அத்வானியையும் ராம்நாத்கோவிந்த் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...