தேசிய செய்திகள்

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 175- பேருக்கு கொரோனா

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 175- பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 175- பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 6,39,464 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 105 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பால் இன்று ஒருவர் பலியாகியுள்ளார். கொரோனாவில் இருந்து இதுவரை மொத்தம் 6,27,149 பேர் குணமடைந்துள்ளனர். 10,911 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா தொற்று பாதிப்புடன் இன்றைய தேதியில் 1,404 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.

SCROLL FOR NEXT