தேசிய செய்திகள்

டெல்லியில் கொரோனா தடுப்பூசிகளுக்கு இப்போதும் தட்டுப்பாடு உள்ளது: கெஜ்ரிவால்

டெல்லியில் கொரோனா தடுப்பூசிகளுக்கு இப்போதும் தட்டுப்பாடு உள்ளது என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லியில் கொரோனா தடுப்பூசிகளுக்கு இப்போதும் தட்டுப்பாடும் நிலவுவதாக முதல் மந்திரி கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் மேலும் கூறுகையில், கொரோனா பெருந்தொற்றின் 3-வது அலை பற்றி மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

கொரோனாவின் மூன்றாவது அலையில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி அவசியமானது. டெல்லியில் ஒரு லட்சம் பேருக்கு தினமும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. காசியாபாத், நொய்டாவில் இருந்து தடுப்பூசி போட மக்கள் வருகின்றனர். டெல்லியில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த ஒவ்வொரு மாதத்திற்கும் 80-85 தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன.

நமக்கு தேவையான தடுப்பூசி டோஸ்கள் இருந்தால் அடுத்த 3 மாதங்களில் முழுவதுமாக தடுப்பூசி செலுத்த முடியும். டெல்லியில் 18-வயதிற்கு மேற்பட்டவர்கள் 1.5 கோடி பேர் உள்ளனர். எனவே 3 கோடி டோஸ் தடுப்பூசிகள் தேவைப்படுகிறது.

ஆனால் தற்போது வரை டெல்லிக்கு வெறும் 40 லட்சம் டோஸ்கள் மட்டுமே கிடைத்துள்ளன. எங்களுக்கு இன்னும் 2.6 கோடி டோஸ்கள் தேவைப்படுகிறது. போதுமான அளவு தடுப்பூசிகளை விநியோகிக்க வேண்டும் என மத்திய அரசை நான் வலியுறுத்துகிறேன் என்றார்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்