தேசிய செய்திகள்

டெல்லி வன்முறை: 885 பேர் மீது 167 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு - போலீசார் தகவல்

வடகிழக்கு டெல்லியில் நடந்த வன்முறை காரணமாக இதுவரை 167 முதல் தகவல் அறிக்கைகள், 885 பேர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி,

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக வடகிழக்கு டெல்லியின் ஜாப்ராபாத், மாஜ்பூர் உள்ளிட்ட பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த போராட்டத்துக்கு எதிராக மற்றொரு பிரிவினரும் கடந்த 23-ந்தேதி போராட்டம் நடத்த முயன்றனர்.

இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இரு பிரிவினரும் ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். அப்போது போலீசார் தலையிட்டு கண்ணீர் புகை குண்டுகளை வீசி மோதலை கட்டுப்படுத்தினர். ஆனால் இந்த மோதல் மறுநாளில் மிகப்பெரும் வன்முறையாக வெடித்தது. ஜாப்ராபாத், மாஜ்பூர், சந்த்பாக், குரேஜிகாஸ், பஜன்புரா, யமுனா விகார் என வடகிழக்கு டெல்லி முழுவதும் வன்முறை பரவியது.

சில இடங்களில் துப்பாக்கிச்சூடும் நடந்தது. இதில் ஏராளமானோர் படுகாயமடைந்தனர். தலைமை காவலர் மற்றும் உளவு பிரிவு அதிகாரி உள்பட பல உயிரிழப்புகளும் நிகழ்ந்தன. இதையடுத்து வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர துணை ராணுவம் வரவழைக்கப்பட்டது. மேலும் வன்முறை பாதித்த பகுதிகளில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

கடந்த ஒரு வாரமாக நிலவி வந்த பதற்றம் குறைந்து, தற்போது மெல்ல மெல்ல இயல்புநிலை திரும்பி வருகிறது. பெரும்பாலான கடைகள், வர்த்தக நிறுவனங்கள் நேற்று திறக்கப்பட்டன. வீடுகளுக்குள் முடங்கி கிடந்த மக்கள், தற்போது வெளியே வரத் துவங்கி உள்ளனர். டெல்லி வன்முறை சம்பவங்களுக்கு இதுவரை 42 பேர் பலியாகி உள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் வடகிழக்கு டெல்லியில் நடந்த வன்முறை காரணமாக இதுவரை 885 பேர் மீது, 167 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் சமூக வலைதளங்களை மக்கள் பொறுப்பான முறையில் பயன்படுத்துவதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும், பொதுமக்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் போது கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...